Sunday 12 July 2015

சேற்றில் மாட்டிக்கொண்ட ஸ்ருஷ்டி!

இரா.சரவணன் இயக்கத்தில் நரேன் - ஸ்ருஷ்டி நடிக்கும் படம் 'கத்துக்குட்டி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. அப்போது வயலில் நாற்று நடுவதுபோல் ஸ்ருஷ்டிக்கு சீன் வைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.


 மும்பையைச் சேர்ந்த ஸ்ருஷ்டிக்கு எப்படி சேற்றில் இறங்கி நாற்று நடத் தெரியும்? அதனால் ஸ்ருஷ்டி வயலில் இறங்காமல் தயங்கி இருக்கிறார். உடனே, துணைக்கு கிராமத்துப் பெண்கள் சிலரை வரவழைத்து அவர்கள் துணையுடன் ஸ்ருஷ்டியை வயலில் இறக்கி விட்டிருக்கிறார்கள். கிராமத்துப் பெண்கள் சொல்லிக் கொடுத்ததைப்போல் நாற்று நடும் காட்சியில் அசத்தலாக நடித்திருக்கிறார் ஸ்ருஷ்டி.


 இயக்குநர் 'டேக் ஓகே' சொல்ல, வயலில் இருந்து கிளம்பி வர வேண்டிய ஸ்ருஷ்டி அங்கேயே நின்றிருக்கிறார். அப்போதுதான் யூனிட்டுக்குப் புரிந்திருக்கிறது... ஸ்ருஷ்டியின் இரண்டு கால்களும் சேற்றில் மாட்டிக் கொண்டது. கால்களை வெளியே எடுக்க முடியாமல் ஸ்ருஷ்டி தத்தளிக்க, ஒருவழியாக கிராமத்தினரும் படக்குழுவினரும் வயலுக்குள் இறங்கி ஸ்ருஷ்டியை மீட்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment